யாத்திரையின் பயன்
பல விஷயங்களுக்காக மக்கள் பயணம் செய்கிறார்கள். சிலர் எதையோ ஆய்வு செய்வதற்காக பயணம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தினசரி அலுவல்களில் இருந்தும், சிலர் தங்கள் குடும்பத்தின் தொந்தரவுகளில் இருந்து சிறிது விடுபட வேண்டும் என்றும் பயணம் செய்கிறார்கள் ஆனால் ஒரு புனித யாத்திரையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. இது எதையோ அடையவேண்டும் என்றோ, எதையோ அறியவேண்டும் என்றோ, எதையோ பெறவேண்டும் என்றோ மேற்கொள்ளப்படுவது அல்ல. யாத்திரை என்பது உங்களைப் பணிவுள்ளவராக மாற்றும் ஒரு செயல்முறை.
யாத்திரை என்றால், வேறு ஒரு தன்மை உங்களை ஆட்கொள்ள நீங்கள் அனுமதிக்கிறீர்கள்
இந்த முழு படைப்பில், நீங்கள் ஒரு சிறிய உயிரினம் என்று உணரவைப்பது தான் யாத்திரையின் நோக்கம். இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசி. இந்த யாத்திரை எல்லையற்றுப் போவதற்கான திசையில் உங்களை நடத்திச் செல்கிறது. மிகச் சிறியவர் என்று உணரச்செய்கிறது. நீங்கள் சிறியவராக ஆக, உங்களை முழு விருப்பத்துடன் நீங்கள் அனுமதிக்கும்போது, அது உங்களை பெரிதாக்கும். நான் ஒன்றுமில்லை என்று பணியும்போது, நீங்கள் உண்மையில் எல்லையற்றுப் போகிறீர்கள் *
ஒவ்வொரு மனிதரும் தன் எல்லைகள் உடைவதைத்தான் விரும்புகிறார். ஆனால் அதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார். நோக்கம் சரியாக இருந்தாலும் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
யாத்திரையை, பொதுவாக ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்ந்து செல்வது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே போலத்தான் ஆன்மிகப் பயணங்களும் கருதப்படுகிறது. ஆனால், ஆன்மிக யாத்திரை என்பதன் உண்மையான பொருள் என்னவென்றால், உள்முகமான பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் பல படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கடப்பது தான் ஆன்மிக யாத்திரை என்றழைக்கப்படுகிறது.
யாத்திரை பற்றி
யாத்திரை செல்ல
சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தல யாத்திரையாக செல்வதற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் உணவு தங்கும் வசதி உள்பட யாத்திரை ஏற்பாடு செய்து தருகிறோம்
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்0
அறிவிப்புக்கள்
6th Feb 2026 6:00 AM
8th Feb 2026 6:00 PM
-
முன்பதிவுக்கான கடைசி தேதி :
1st Feb
Completed
10th Jan 2026 6:00 AM
11th Jan 2026 6:00 PM
-
முன்பதிவுக்கான கடைசி தேதி :
9th Jan
Completed
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை